Skip to content


Untitled

‘கனவுச்சிப்பி’

* கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது.
* கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக் கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். “நடக்க முடியுமா”" என்று தவிக்கும் மனிதனுக்கு, “பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பவை கனவுகள்.
* கனவுகள் வெற்றிக் கோலம் வரைவதற்காக வைக்கப்படுகிற புள்ளிகள். அவற்றை செயல் என்னும் கோடுகளால் சேர்ப்பவர்களே பெரும்புள்ளிகள். * கனவுகள் இலட்சியங்களாகலாம். இலட்சியங்கள், வெறும் கனவுகளாக விரயமாகி விடக்கூடாது.
* கனவாய் முளை விட்டு, முயற்சியில் துளிர்விட்டு, செயலாய் வேர்பிடிக்கும் விருட்சங்களே இலட்சியங்கள்.
* கனவென்னும் சிப்பிக்குள் கலையழகோடு கண் சிமிட்டுகிறது சாதனை என்னும் ஆணி முத்து. முயற்சியின் கடலுக்குள் மூழ்குங்கள், முத்தெடுங்கள்.

(’மரபின் மைந்தன்’ ம.முத்தையாவின் “கனவுச் சிப்பியைத் திறந்து பார்” என்ற கட்டுரையிலிருந்து தேர்ந்த ஒரு பகுதி.)

“வெற்றிச் சிறகுகள் விரியட்டும்”
‘மரபின் மைந்தன்’ ம.முத்தையா
விஜயா பதிப்பகம், கோவை.
128 பக்கங்கள்
விலை: ரூபாய் முப்பத்தைந்து மட்டும்

Posted in Self-improvement.

No comments



Untitled

இன்று ஒரு தகவல்: “வீடீயோ கேம் பிசினஸ் ரூபாய் இரண்டு லட்சம் கோடியைத் தாண்டியது!”

வீடீயோ கேம் பிசினஸ் அமெரிக்காவில் ஆரம்பித்து சீனா வரை கொடிகட்டிப் பறக்கிறது. மைக்ரோஸாப்த் நிறுவனத்தின் எக்ஸ்பாக்ஸ் 360, சோனியின் பிளே ஸ்டேஷன் 3, ஆகியவற்றுடன் இப்போது நின்டெண்டோவின் வீடயோ கேம் ஆகியவையும் விற்பனையாகின்றன. அடுத்த ஐந்தாண்டில் வீடீயோ கேம் வர்த்தகம் பல மடங்கு பெருகும்.

(நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008)

Posted in Tidbits.

No comments



Untitled

பாரதி கவிதைகள்: “பராசக்தி”

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
நானிலத்தவர் மேனிலை எய்தவும்
பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்
பண்ணிலே களிகூட்டவும் வேண்டி நான்
மூட்டும் அன்புக் கனலோடு வாணியை
முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்
காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்
கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.

மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்
வானிருண்டு கரும்புயல் கூடியே
இழையும் மின்னல் சரேலென்று பாயவும்
ஈர வாடை இரைந்தொலி செய்யவும்
உழைஎலாம் இடையின்றி இவ்வான நீர்
ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
“மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்!
வாழ்க தாய்!” என்று பாடும் என் வாணியே.

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்
சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்;
அல்லினுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.
கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,
கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,
புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,
பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!

பாரதியின் “பராசக்தியிலிருந்து” ஒரு பகுதி.

Posted in Technical.

No comments



Untitled

ஆன்மீக சிந்தனை:

அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே. - ‘திருமந்திரம்’

Posted in Sports.

No comments



Untitled

பட்டுக்கோட்டை பாடல்: “சின்னஞ்சிறு கண்மலர்….”

சின்னஞ்சிறு கண்மலர்
செம்பவள வாய்மலர்
சிந்திடும் மலரே ஆராரோ!
வண்ணத்தமிழ்ச் சோலை
மாணிக்க மாலை ஆரிரோ,
அன்பே ஆராரோ!
ஏழை நம் நிலையை எண்ணி
நொந்தாயோ!
எதிர்கால வாழ்வில்
கவனம் கொண்டாயோ!
நாளை உலகம்
நல்லோரின் கையில்
நாமும் அதிலே
உய்வோம் உண்மையில்
மாடிமனை வேண்டாம்
கோடி செல்வம் வேண்டாம்
வளரும் பிறையே நீ போதும்!

Posted in Tamil Poetry.

No comments



Untitled

இன்றைய சிந்தனைக்கு

நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி. நண்பன் உன் வெற்றிக்குத் துணையாய் இருப்பான். எதிரி உன் வெற்றிக்குக் காரணமாய் இருப்பான். - சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு

(நன்றி: தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008)

Posted in Thought for the day.

No comments



Untitled

பாரதி பற்றி பட்டுக்கோட்டை (கல்யாணசுந்தரம்):
—————————————————————-
பாரதிக்கு நிகர் பாரதியே - மண்ணில்
யாரெதிர்த்தாலும் மக்கள்
சீருயர்த்தும் பணியில்…
பாரதிக்கு நிகர் பாரதியே!
பாதகம் செய்பவரைப்
பாட்டாலே உமிழ்ந்தான்.
பஞ்சைகளின் நிலையைப்
பார்த்துள்ளம் நெகிழ்ந்தான்
பேதங்கள் வளர்ப்பவரைப்
பித்தர் என்றே இகழ்ந்தான்
பெண்மையைச் சக்தியை
உண்மையைப் புகழ்ந்தான்.

Posted in Tamil Poetry.

No comments



Untitled

பாரதி கவிதைகள்: “மஹாசக்திக்கு விண்ணப்பம்”

எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்.
பண்ணிய பாவமெல்லாம்
பரிதிமுன் பனியே போல
நண்ணிய நின் முன் இங்கு
நசித்திடல் வேண்டும் அன்னாய்.

Posted in Tamil Poetry.

No comments



Untitled

நீங்கள் விரும்பினால்…
————————————
உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.
தடைகளைச் சீர்செய்து தடமாக மாற்றலாம்.
வீழ்ச்சிகளைத் தடுத்து வெற்றிகளை ஈட்டலாம்.
வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்.
வேண்டாத பழக்கங்களை வினாடிக்குள் நீக்கலாம்.
பகைவர்களை மிக நல்ல நண்பர்களாக மாற்றலாம்.
பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்.
என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்.
கேள்விகளுக்குப் பதில்கள் உங்களிடமே கிடைக்கலாம்.
கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாதனைகள் படைக்கலாம்.
தேவைகள் பெருகும்போது வரவுகளும் பெருக்கலாம்.
வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்.
மௌனத்தைப் பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்.
குழப்பங்களை இல்லாமல் செயல்திட்டம் வகுக்கலாம்.
கவனத்தைக் குவிப்பதனால் காரியத்தில் வெல்லலாம்.
வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்.
விவாதங்கள் ஒவ்வொன்றும் தீர்வு நோக்கிச் செல்லலாம்.
முடக்கவரும் எதிர்ப்புகளை முன்கூட்டித் தடுக்கலாம்.
மாற்றங்கள் ஏற்பதனால் ஆதாயம் காணலாம்.
ஏமாற்றம் வந்தாலும் தொட்டதைத் தொடரலாம்.

“ஒரு கப் உற்சாகம்”
‘மரபின் மைந்தன்’ ம.முத்தையா
விஜயா பதிப்பகம், கோவை
விலை: ரூபாய் முப்பது மட்டும்.

Posted in Self-improvement.

No comments



Untitled

நலக்குறிப்புகள்:

ஒரு பொருளுக்கு மூன்று பக்கங்கள் (3-D) இருப்பதைப் போல, ஆரோக்கியத்திற்கும் மூன்று பக்கங்கள். உடல், மனம், சமூகம் என்பவை அவை. உடற் குறைவு மனதைப் பாதிக்கும். மனநிலை உடலைப் பாதிக்கும். சமூகச்சூழல் இரண்டையும் பாதிக்கும். ஆகவே இம்மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்பு உடையவை. ஆரோக்கியமாக வாழ விரும்புவோர் இதை மனதிற் கொள்ளுதல் அவசியம். - அமரர் மகரிஷி க.அருணாசலம்

Posted in health.

No comments