ஐசக் அசிமோவின் கதைகளில் வரும் பாத்திரம் போன்ற ஒன்றை நம்மூர் சந்துமுனை கூழூத்தும் கோவில் வாசல் பெண்களின் குலவைகளுக்கு மத்தியில் கொண்டுவந்து நிறுத்தும் அமரர் சுஜாதாவின் அசத்தலான திரைக்கதையை, நிஜ ஹாலிவுட் தொழில் நுட்பங்கள் சேர்த்து, ரஜினி என்னும் டெர்ரரோடு வந்து மிரட்டி பட்டையை கிளப்பி இருக்கிறார் ஷங்கர் ! வியக்கவைக்கும் ஷங்கருக்கும், விஷ்வா ரூப ரஜினிக்கும் அடுத்தபடியாய் படம் முழுக்க ஒவ்வொரு frame -இலும் வியாபித்து நிற்கிறார் ‘வசன பாரதி’ என்று ஜா.ரா.சுந்தரேசனால் கொண்டாடப்பட்ட அமரர் சுஜாதா. மெமரி 1 zetta byte… Neuro system download… Target demagnetization…” என்று ‘ என் இனிய இயந்திரா’ போல sci -fi யாய் வேறு தளத்தில் பயணிக்கும் கதையை ” தோடா, நீ ஒன்னியும் பண்ண முடியாது…” என்று லோக்கல் கிரௌண்டுக்கு கூட்டி வந்து கலந்து கட்டி அடிக்கிறார் சுஜாதா. தொல்காப்பிய வரிகள், வயசு – ஒரு நாள்!, மேற்கு மாம்பலம் போன் நம்பர், நாட்டை குறிச்சி ராகம் நடுவுல இங்க சுதி ஏறிடிச்சி, கடவுள் இன்னா யாரு? சிட்டி பாபு விளக்கம், சிட்டி upgraded version 2 , இதழ்… படுத்திருக்கும் வரிக்குதிரை- என எந்திரன் முழுவதிலும் வயராய் சாரி உயிராய் இழைந்திருக்கிறார். அதுவும் ” வீட்டு அட்ரஸ் இல்ல, I .P அட்ரஸ் இருக்கு!” என்று கூறி ” 103 . .. என்று class -A IP அட்ரஸ் சொல்லி ஜல்லி அடிக்கும் இடத்திலும், மருதுவக்கலூரி மாணவி சனா படிக்கும்போது சிட்டியிடம் இருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றும் குடல் சுற்றிக் கிடக்கும் குழந்தையின் பிரசவ நேரங்களில் வெளிப்படும் technological terminology depth கண்டு தானாகவே ” சுஜாதா நிக்கறாரு மச்சி !” என்கிறது வாய். தி.மு.க. மற்றும் மாறன் சகோதரர்கள் மீதுள்ள கோபத்தில் ‘ எந்திரனை’ புறக்கணிக்க வேண்டும் என்று இணையத்தில் எழுதி வரும் தமிழ் மக்கள் சிலர், ஒட்டு மொத்த உலகத்தையும் தமிழ் சினிமாவை அண்ணாந்து பார்க்கச் செய்த எந்திரனை ஒரு படமாக மட்டுமாவது கருதி பார்க்க வேண்டும். மைனஸ் பாயிண்ட்ஸ்: இடைவேளை வரை தட தட வென்று சூப்பர் பாஸ்டில் போகும் கதை, இடைவேளைக்கு அப்புறம் இழுக்கும் அந்த ரங்குஸ்கி காட்சிகள் போன்ற 10 ௦ நிமிடங்கள். பிளஸ் பாயிண்ட்ஸ்: ரஜினி, ரஜினி, ரஜினி நேர்த்தியான தொழில் நுட்பம் Sci -fi சமாச்சாரத்தை சாமானியனுக்கும் புரியும் படி சொன்ன விதம் நம்பி குழந்தை,குட்டிகளை கூட்டிப்போய் காட்டலாம் போன்ற குதூகலமான படம் ஹாலிவுட் தொழில் நுட்பம் ( CNN Headlines “ Enthiran matches Holywoods’s best”) சுஜாதா வின் வசனங்கள், நிச்சயமாய் பாருங்கள், மணக்குடியான் வெர்டிக்ட்: ” எந்திரன் - தமிழ் சினிமாவின் உச்சம். மனதையும், அறிவையும் ஒன்றாய் தொட்டவன்”
From www.manakkudiyan.com :
எந்திரன் – Movie Review….
ஹிந்தி படம் பார்த்துக்கொண்டிருந்த இருந்த ஹிந்திக்காரனை தலையில் தட்டி தமிழ்ப் படம் பார்க்க வைத்தவர் மணிரத்தினம். இங்கிலீஷ் படம் பார்த்துக்கொண்டிருந்த இங்கிலீஷ்காரனை தலையில் தட்டி தமிழ் படம் பார்க்க வைக்கிறார் ஷங்கர் !
’ இது இயக்குனர் ஷங்கரின் கனவுப் படம்ம்ம்ம் !” என்று இழுத்து இழுத்து வைரமுத்து சொல்வது உண்மையல்ல. இது ஒட்டு மொத்த தமிழ் சினிமாவின் கனவுப் படம்!
ரஜினி… ‘சொன்னதை மட்டுமே செய்யும் சிட்டி’ போல இயக்குனர் சொன்னதை மட்டும் செய்து அடக்கி வாசித்திருக்கிறார். இடை வேளைக்கு அப்புறம் வில்லனாய் வந்து தனது ஒரிஜினல் ஸ்டைலில் வாயைக்கோணி ‘ ரே…போ..’, ” மே…” என்று மிரட்டியிருக்கிறார். இரண்டாயிரம் சைடு ஆர்டிஸ்ட்கள் புடை சூழ என்ட்ரி சாங், ‘ சித்தப்பா ஒன்னு தெரியுமா உங்களுக்கு…’ இன்னு சுருட்டை உதடில் பார்க் பண்ணுவது, ‘ மாயாண்டி நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் ” போன்ற பஞ்ச் டயலாக்ஸ், காமெராவை உற்றுப் பார்த்து ‘ இது தானா சேர்ந்த கூட்டம்’, ‘ அவன் பயந்து நான் இது வரைக்கும் பாத்ததில்ல’, ‘ நீ தான் பழசெல்லாம் மறக்க மாட்டியே…?’ போன்ற கதாபாத்திரத்தையும் தாண்டி ரஜினியை கண் முன்கொண்டு வந்து நிறுத்தம் சமாச்சாரங்கள் எந்திரனில் இல்லை. ‘சிவாஜி’யை போல ஷங்கர் இயக்கிய ரஜினி படமல்ல இது. எந்திரன் ரஜினி நடித்த ஷங்கர் படம். கள் இறக்கும் கலாபவன் மணி காதலியின் கையை பிடித்துக்கொண்டு கத்தியை எடுத்து ‘ ஏய் சீவிடுவேன்…’ என்பதும், ரஜினி சண்டையே போடாமல் தப்பித்து ஓடுவதையும் பார்க்கும்போதே, ரஜினியையும் தாண்டி கதாபாத்திரம் மட்டுமே முன் நிறுத்தப்பட்டிருப்பது தெரிகிறது. ரஜினி தனது ஸ்டார் இமேஜ் தாண்டி அழகாக வெளியே வந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். ஆனாலும்… கிடைத்த கேப்பில் வில்லன் ரோலில் வந்து கிடா ( black sheep !) வெட்டியிருக்கிறார் அசத்தலாய். வில்லன் ரோலில் தனது ஒரிஜினல் பாணியில் ‘ ஏன் உன் ரத்தம் இன்னு சொல்லேன்…. மே…’ என்று அலப்பறை செய்திருக்கிறார்.
வஸ்தாதுகளை ‘ தலைவர்’ பொரட்டி போட்டு ‘ தாய்ப்பால கக்கர வரைக்கும் பறந்து பறந்து அடிப்பேன்’ இன்னு டயலாக் சொல்லி அடிப்பாரு என்று எண்ணி போகும் ரசிகனுக்கு கடைசி 45 நிமிடத்தில்தான் தீனி கிடைக்கிறது. இப்போ எண்ட்ரி இப்போ ரகளை வரும் என கைதட்டி விசிலடிக்க காத்திருந்து படத்தில் மூழ்கி போன ரசிகர்களின் உணர்வு, கடைசி 45 நிமிடத்தில் பீறிக்கொண்டு வருகிறது.
‘ காதல்ன்னு வந்தா நட்டு கழண்டிடும் இன்னு சொன்னது உண்மை’ என்று சொல்லும் இடத்தில் சிட்டி பாத்திரம் தொடுகிறது.
ஐஸ்வர்யா ராய் அழகு, அழகு, அட நன்றாகவும் செய்திருக்கிறார்.
நல்லவேளை சுமன் செய்யவில்லை, டேனி செய்த ரோலை.
கருணாசுக்கும், சந்தானதிருக்கும் வேலை இல்லை, சிட்டியே சிரிக்க வைப்பதால்.
ஆர்ட் டைரக்ஷன், பின்னணி இசை, ரத்தினவேலுவின் ஒளிப்பதிவு என எல்லாம் அருமை.
கிராபிக்ஸ் – ? எது கிராபிக்ஸ், எது ரியல் என கண்டறிய முடியா அற்புதம். அசத்தல். அதகளம் !
இன்னும் நிறைய .
Archives
- October 2010
- July 2010
- June 2010
- May 2010
- March 2010
- January 2010
- December 2009
- November 2009
- October 2009
- September 2009
- July 2009
- June 2009
- April 2009
- March 2009
- February 2009
- January 2009
- December 2008
- November 2008
- October 2008
- September 2008
- August 2008
- July 2008
- June 2008
- May 2008
- April 2008
- March 2008
- February 2008
- January 2008
- December 2007
- November 2007
- October 2007
- September 2007
- August 2007
Blogroll
Friends' Update
-
Loading ...Please wait..















வடலூர் வள்ளலார் எனும் ஞானஜோதி பற்றிய சம்பவம் ஒன்று சொல்வார்கள். அவர் மண்ணில் ஸ்தூல உடலுடன் வந்தபோதே, அவர் மீது பக்தி கொண்ட அன்பர் ஒருவர், வள்ளலாரின் திருமேனியை அப்படியே களிமண்ணால் பொம்மையாகச் செய்து நெருப்பில் சுட்டு, வண்ணம் பூசி, அவரிடம் கொண்டு வந்து கொடுத்தாராம்! எவரையும் புண்படுத்தவோ அலட்சியப் படுத்தவோ எண்ணாத கருணை மனம் கொண்ட ராமலிங்க வள்ளலோ, அந்த பொம்மையை வாங்கி வெகு அலட்சியமாகத் தள்ளி வைத்தாராம்.
அதைக் கண்டு துடித்துப்போனவர், ”ஏன் சாமீ… அந்த மண் பொம்மையை அலட்சியம் செஞ்சுட்டீங்க?” என்று வேதனையுடன் கேட்க, ”அப்பா… இந்த உடம்பு மண்ணால் தான் பெரும்பாலும் உண்டாகிறது. இந்த மண்ணுடம்பைப் பொன்னுடம்பாக்கும் சாகாக் கலையை உலகுக்கு உரைக்கவே இறைவன் என்னை அனுப்பினான். இதை உணர்ந்து, ஆழ்ந்து ஈடுபட்டு இந்த மண்ணுடம்பை பொன் னுடம்பாக்கினேன். நீயோ பொன்னுடம்பை மண்ணுடம்பாக ஆக்கி வந்திருக்கிறாய். ‘பொன் உடம்பாக்கிக் கொள்ளும் ரகசியத் தைக் கற்க எவரும் இல்லையே’ என்று வருந்தி வரும் வேளையில், நீ பொன்னுடம்பையும் மண்ணுடம்பாக்கினால் நான் எப்படி மகிழ்வேன்?” என்றாராம்.

